கரோனா காலத்திலும் தொழில் வளர்ச்சிக்கு நிறைய ஒப்பந்தங்களை அரசு மேற்கொண்டதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தில்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதில், முதல்வர் பழனிசாமி காணொலி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, கரோனா காலத்திலும் தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு நிறைய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.
தொழில் தொடங்க எளிய முறை, மனித சக்தி, தடையற்ற மின்சாரத்தால் தமிழகத்திற்கு தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்று கூறினார்.