சமையல் எண்ணெய்யின் இறக்குமதி மீதான சுங்கவரியை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமையல் எண்ணெய்யின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்து வந்தது.
இந்நிலையில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயா எண்ணெய் உள்ளிட்டவற்றின் இறக்குமதி உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5 சதவிகித சுங்கவரி முற்றிலுமாக நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.