ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கருவலூர் மாரியம்மன் கோயில் பழமையான அரசமரம் முறிந்தது!

அவிநாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோயில் முன் இருந்த பழமையான அரசமரம் புதன்கிழமை சாய்ந்து விழுந்ததால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

News image

கருவலூர் மாரியம்மன் கோயில் நுழைவாயில் முன்பு இருந்த பழமையான அரசமரம் முறிந்தது.

Updated On :29 செப்டம்பர் 2021, 7:04 am

அவிநாசி: அவிநாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோயில் முன் இருந்த பழமையான அரசமரம் புதன்கிழமை சாய்ந்து விழுந்ததால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அவிநாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும், கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் தேர்த்திருவிழா உள்ளிட்டவை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். மேலும் இக்கோயில் நுழைவாயில் முன், 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசமரத்தடியில் விநாயகர் கோயிலும் உள்ளது.

Story image

முறிந்து விழுந்த 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கருவலூர் மாரியம்மன் கோயில் நுழைவாயில் முன்பு இருந்த அரசமரம்.

இந்நிலையில், விநாயகர் கோயில் அரசமரம் திடீரென பிளவு ஏற்பட்டு புதன்கிழமை முறிந்து சாய்ந்து விழுந்தது. இதில் விநாயகர் மேடை பின்வரும் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையும் சாய்ந்தது. 

தினசரி கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இந்த அரச மரத்தடி விநாயகர் மேடையில் அமர்ந்திருப்பது வழக்கம். அதிர்ஷ்டவசமாக அரசமரம் முறிந்து சாய்ந்து விழும் போது யாரும் அங்கு இல்லாதது, கருவலூர் மாரியம்மன் அருள் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் பழமையான அரசமரம் முறிந்து சாய்ந்து விழுந்ததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து முறிந்து சாய்ந்த  மரங்களை அப்புறப்படுத்தவும், மீதமுள்ள மரத்தை பாதுகாப்பது குறித்தும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.