

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கரோனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த ஒபாமாவுக்கு தொற்று பரிசோதனை செய்ததில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது ஒபாமா நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கரோனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், நீங்கள் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவில் குணடைந்து வரவும், உங்கள் குடும்பத்தின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கனடாவில் சாலை விபத்து: இந்திய மாணவர்கள் 5 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.