தமிழ்நாட்டில் புதிதாக 2743 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,743 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,90,834 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | மெட்ரோ ரயிலில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்
மேலும் 1791 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,35,090 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 38,027 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 17,717 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 1062 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். து.