எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை மிகவும் அவசியம்: ஆம் ஆத்மி

அதிகரித்துவரும் விலைவாசி, வேலையின்மைப் பிரச்னைகளுக்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது  என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
அரசு அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவிவிடும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
Updated On :5 டிசம்பர் 2023, 10:32 am

DIN

அதிகரித்துவரும் விலைவாசி, வேலையின்மைப் பிரச்னைகளுக்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது  என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதி தில்லியில் வரும் டிச. 6 ஆம் தேதி, புதன்கிழமை இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போன்றோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இயலாதெனத் தெரிவித்துள்ள நிலையில் ஒற்றுமைக்கான அழைப்பை ஆம் ஆத்மி விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான உத்திகள் தொடர்பாக விவாதிப்பதற்காகக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து, மூன்றாவது வாரத்தில் அடுத்த சுற்றுக் கூட்டம் நடைபெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்குமா என்று கேட்டபோது, அனேகமாகக் கூட்டம் ஒத்திவைக்கப்படலாம். இதுவரையிலும் தகவலேதுமில்லை. ஆனால், ஒனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி உறுதியாக இருக்கிறது என்று கட்சியின் எம்எல்ஏ துர்கேஷ் பாதக் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.