முதல்வர் ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி: எதற்கு?

கோவையில் தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் .
முதல்வர் ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி: எதற்கு?
Updated on
1 min read

கோவையில் தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி தந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி: எதற்கு?
சூப்பர்வைசர், டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

எண்ணற்ற விளையாட்டு வீரர்- வீராங்கனையரைக் கொண்ட கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுத்து உறுதியுடன் செயல்படும்.

சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்னும் கோவை மக்களின் கனவை நனவாக்குவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com