தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வாழப்பாடி அருகே வாகனம் மோதி பைக்கில் சென்ற கணவன்-மனைவி பலி

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கணவன்- மனைவி மீது ரெக்கவரி வாகனம் மோதி பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News image

வாழப்பாடி அருகே இருசக்கர வாகன விபத்தில் பலியான முருகன் (58) மற்றும் இவரது மனைவி பொன்னம்மாள் (54).

Updated On :1 ஆகஸ்ட் 2024, 5:04 am

DIN

வாழப்பாடி: வாழப்பாடி அருகே புதன்கிழமை மாலை துக்கம் விசாரித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய கணவன்- மனைவி மீது ரெக்கவரி வாகனம் மோதி பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம்,வாழப்பாடி வாழப்பாடி அடுத்த படையாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (58). இவரது மனைவி பொன்னம்மாள் (54). இருவரும் புதன்கிழமை மாலை வாழப்பாடி அருகே காட்டு வேப்பிலைப்பட்டி ஊராட்சி சேஷன்சாவடியில் உறவினர் ஒருவர் இறந்ததற்கு துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

துக்கம் விசாரித்து விட்டு சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். சேசன்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரெக்கவரி வாகனம், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், படுகாயம் அடைந்த பொன்னம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலையில் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட விவசாயி முருகனும் பலியானார்.

உறவினரின் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய கணவன்-மனைவி, சாலை விபத்தில் பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.