மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

நடிகர் ஆர்யனின் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்.

News image

மீனாட்சி பொண்ணுங்க தொடரின் காட்சி.

Updated On :1 ஆகஸ்ட் 2024, 3:39 pm IST

நடிகர் ஆர்யன் நடித்துவரும் பிரபல தொடரான மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.

கணவனால் ஏமாற்றப்பட்ட மீனாட்சி (தாய்), தனது 4 மகள்களையும் வளர்த்து, சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழவைக்க நினைக்கிறார். அதற்காக தாயுடன் 4 மகள்களும் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதை.

இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை செளந்தர்யா ரெட்டி இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகர் ஆர்யன் நடித்துவருகிறார். ஹரன் பிரசன்னா திரைக்கதை எழுத, முத்துக்குமாரசாமி இயக்குகிறார்.

மீனாட்சி பொண்ணுங்க தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், வரும் ஆக. 4 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு கிளைமேக்ஸ் காட்சிகளுடன் இத்தொடர் நிறைவடையவுள்ளது.

கடந்த 2022 ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவரும் மீனாட்சி பொண்ணுங்க தொடர், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.