அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

உ.பி.யில் டபுள் டெக்கர் பேருந்து - கார் மோதி விபத்து: 7 பேர் பலி

ஆக்ரா-லக்னெள விரைவுச் சாலையில் விபத்து.

News image

டபுள் டெக்கர் பேருந்து - கார் மோதி விபத்து.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 10:23 am IST

உத்தரப் பிரதேசத்தில் ஈரடுக்கு பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வர்மா கூறுகையில்,"ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் ரேபரேலியில் இருந்து தில்லி நோக்கிச் சென்ற ஈரடுக்கு பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

லக்னெள நோக்கிச் சென்ற கார் மீது ஈரடுக்கு பேருந்து மோதியதில், பேருந்தில் இருந்த 20-25 பேர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

லக்னெள-ஆக்ரா விரைவுச் சாலையில் நடந்த இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பேருந்தில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர். கார் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. பேருந்தில் பயணம் மேற்கொண்ட மக்கள் அனைவரும் தங்களது இடங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.