பிகாரில் டி.ஜே. வாகனம் உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கன்வார் யாத்திரையின் போது டி.ஜே. வாகனத்தில் பக்தி பாடல்களை ஒலித்தபடி ஞாயிற்றுக்கிழமை இரவு சோனேபுரில் உள்ள பாபா ஹரிஹர்நாத் கோயிலுக்கு சென்றுசொண்டிருந்தனர்.
அப்போது அந்த டி.ஜே.வாகனம் உயர் மின்னழுத்த கம்பியின் மீது உரசியது. இந்த சம்பவத்தில் டி.ஜே.வாகனத்தில் அமர்ந்திருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் ஹாஜிபுர் சதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், காயமடைந்த மேலும் நான்கு பேர் உள்ளூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹாஜிபுர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் பலி

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி! சிகிச்சையில் உள்ள 6 பேருக்கு பார்வை இழப்பு!

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலி!
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு



