மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஆக. 13-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.

News image

ஆக. 13-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 2:46 am IST

தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆக. 13-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவரது அறிவிப்பு விவரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்டரங்கில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த குறிப்புகள் தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் பயணம் - தொழில் திட்டங்கள்: தொழில் முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்காவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூா்வ தகவலை தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. ஆனாலும் 15 நாள்கள் வரை அவரது பயணம் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்தப் பயணம் தொடா்பாக, அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மாநிலத்தில் முதல்வா் இல்லாத சூழலில், எத்தகைய பணிகளை அமைச்சா்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், தமிழகத்தில் புதிதாக தொடங்கவுள்ள தொழில் திட்டங்களுக்கும் அனுமதிகள் பெறப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.