தமிழகத்தில் 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த நிஷா, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு.
தமிழக அரசு.
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் 56 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது

தமிழகம் முழுவதும் உள்ள 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது

அதன்படி, மதுரை தெற்கு மண்டல அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பார் சுஜித் குமார், சென்னை துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த நிஷா, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இணைப்பு
PDF
24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற விவரம்
பார்க்க
தமிழக அரசு.
செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!

இதனைத் தொடர்ந்து, மேலும் 32 காவல் துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையரக காவல் கண்காணிப்பாளராக ஜெயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை தீவிரவாத தடுப்புப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக வி.பத்ரி நாரயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இணைப்பு
PDF
32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற விவரம்
பார்க்க

சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com