தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

ஆம்ஸ்ட்ராங் மனைவி, பா. இரஞ்சித் மீது வழக்குப் பதிவு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய நிலையில் வழக்குப் பதிவு.

News image

பா. ரஞ்சித்

Updated On :10 ஆகஸ்ட் 2024, 1:28 pm IST

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று(ஆக. 9) நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குநர் பா. இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) ஜூலை 5-இல் சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக இதுவரை 21போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய நபராக கருதப்பட்ட ரெளடி திருவேங்கடம் ஜூலை 14-இல் காவல் துறையின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினா் தற்போது அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் அவா்களுக்கு சதீஷ் என்ற பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையைக் கடத்துவதுடன், அவருடைய குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை வசித்துவரும் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று (ஆக. 9) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.

மேலும், இப்போராட்டத்தில் இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் தீனா உள்ளிட்ட 1500 பேர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குநர் பா. இரஞ்சித் உள்ளிட்ட 1500 மீது, அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.