ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

லட்சுமி தொடரில் இருந்து விலகிய சஞ்சீவ்! இனி இவர்தான்!

லட்சுமி தொடரில் இருந்து விலகினார் சஞ்சீவ் வெங்கட்.

News image

லட்சுமி தொடர் காட்சி

Updated On :4 டிசம்பர் 2024, 8:31 pm IST

லட்சுமி தொடரில் இருந்து நடிகர் சஞ்சீவ் வெங்கட் விலகியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

'திருமதி செல்வம்' தொடரில் செல்வம் என்ற பாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ் வெங்கட்.

இவர் மெட்டி ஒலி, நம்பிக்கை, அண்ணாமலை, அவர்கள், ஆனந்தம், அகல்யா, மனைவி, வேப்பிலைக்காரி, மை டியர் பூதம், பெண், சித்தி 2 உள்ளிட்ட தொடர்களில் பிரதான வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த வானத்தைப்போல தொடரில் காவல் துறை அதிகாரியாக நடித்து இருந்தார்.

சஞ்சீவ் வெங்கட்

சஞ்சீவ் வெங்கட்

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் தொடக்கப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி தொடரில் செல்வன் முருகன் பாத்திரத்தில் நடித்துவரும் சஞ்சீவ் வெங்கட், இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். சீரியல் தொடங்கிய 9 மாதங்களே ஆன நிலையில், இவர் விலகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 எஸ்எஸ்ஆர் ஆர்யன்

எஸ்எஸ்ஆர் ஆர்யன்

இந்த நிலையில், சஞ்சீவ் வெங்கட் நடித்த வந்த பாத்திரத்தில் அவருக்கு பதிலாக, எஸ்எஸ்ஆர் ஆர்யன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மகராசி தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் நடிகை ஸ்ரித்திகாவின் கணவரும்கூட.

லட்சுமி தொடரில் நாயகியாக ஸ்ருதி ராஜ் நடிக்கிறார். ரிந்தியா, நேஹா மேனன், நித்யா உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். 

இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.