எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிக் பாஸ் 8: தகுதி இல்லாத போட்டியாளர் யார்? சிறைக்குச் சென்ற ஜாக்குலின்!

பிக் பாஸ் வீட்டில் விதிக்கப்பட்ட டெவிலும் ஏஞ்சலும் டாஸ்க்கை விளையாட தகுதியே இல்லாத நபர் யார் என்பதைத் தேர்வு செய்தனர்.

News image
செளந்தர்யா, ஜாக்குலின்- படம் | எக்ஸ்
Updated On :4 டிசம்பர் 2024, 12:43 pm

DIN

பிக் பாஸ் வீட்டில் விதிக்கப்பட்ட டெவிலும் ஏஞ்சலும் டாஸ்க்கை விளையாட தகுதியே இல்லாத நபர் யார் என்பதைத் தேர்வு செய்தனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 9வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் பாடகர் ஜெஃப்ரி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (டிச. 4) டெவிலும் ஏஞ்சலும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதில் பிக் பாஸ் வீட்டில் யாருடனும் சண்டையிடாத 8 பேர் ஏஞ்சல்களாகவும், எதற்கெடுத்தாலும் வாதிட்டு சண்டையிடும் போட்டியாளர்கள் டெவில்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஏஞ்சல் அணியில் ரஞ்சித், வி.ஜே. விஷால், அன்ஷிதா, ஆர்.ஜே. ஆனந்தி, பவித்ரா ஜனனி, ஜெஃப்ரி, ரயான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். டெவில்களாக செளந்தர்யா, ஜாக்குலின், முத்துக்குமரன், ராணவ், சாச்சனா, மஞ்சரி, தர்ஷிகா, தீபக், அருண் பிரசாத் உள்ளிட்டோர் உள்ளனர்.

டெவில்களின் வேலை, ஏஞ்சல்களை பொறுமை இழக்கச் செய்து, அவர்களிடம் இருந்து ஸ்டார்களைப் பெறவேண்டும். ஏஞ்சல்கள், தங்களுக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அமைதி காக்க வேண்டும்.

இதில், போட்டியாளர்கள் மத்தியில் கடும் சச்சரவு நிலவியது. ஏஞ்சல்களாக இருப்பவர்களை சோதிக்கும் வகையில் முட்டையை குடிக்கச் சொல்வது, குப்பையை சாப்பிடக் கொடுப்பது போன்ற இரக்கமற்ற செயல்களில் சாச்சனா, மஞ்சரி உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதில் பவித்ரா உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டெவில் ஆக இருக்கத் தகுதியே இல்லாத போட்டியாளர் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை பிக் பாஸ் விதித்தார்.

இதில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் மஞ்சரியையும், ஜாக்குலினையும் தேர்வு செய்தனர். இவர்கள் இருவரில் ஜாக்குலினுக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் தேர்வு செய்ததால் ஜாக்குலின் சிறைக்கு அனுப்பப்பட்டார். மறு அறிவிப்பு வரும்வரை ஜாக்குலின் சிறையில் இருக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

பிக் பாஸ் விதிகளை மீறி நடந்துகொண்டதாக ஜாக்குலின் மீது பலரும் குற்றம் சாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.