டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தொழிலதிபர் சுட்டுக்கொலை தில்லியில் பயங்கரம்

தில்லியில் இன்று காலை நடைபயிற்சியின் போது தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி...

News image
- கோப்புப் படம்
Updated On :9 டிசம்பர் 2024, 5:28 am

DIN

புதுதில்லி: கிழக்கு தில்லியின் ஷாதரா பகுதியில் இன்று காலை நடைபயிற்சியின்போது தொழிலதிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

புதுதில்லியின் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுனில் ஜெயின். 52 வயதான இவர் சமையல் பாத்திரங்கள் சார்ந்த தொழிலை நடத்தி வந்துள்ளார்.

இன்று காலை அவர் நடைபயிற்சியை முடித்துவிட்டு ஃபர்ஷ் பஜாரின் அருகே தனது ஸ்கூட்டரில் வந்துக்கொண்டிருந்தார். அப்பொழுது, இருச்சக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுனிலை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில், சம்பவ இடத்திலேயே சுனில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுனில் உயிரிழந்த சம்பவம் குறித்து ஷாதரா துணைக் காவல் ஆணையர் பிரஷாந்த் கவுதம் கூறுகையில், “இன்று காலை 8.36 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் வந்ததாகவும், சுனில் அந்த மர்ம நபர்களால் தொடர்ந்து 3-4 முறை சுடப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், அவரது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் சுனிலுக்கு யாரிடமும் எந்தவொரு முன்விரோதமும் இல்லை என்றும் இதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அந்த மர்ம நபர்களை கண்டுப்பிடிக்க அப்பகுதியிலுள்ள சிசிடிவிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.