சாத்தனூர் அணையில் 10,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தென் பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
Published on
Updated on
1 min read

கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தென் பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீர்பிடிப்புப் பகுதியில் பெரும் மழை பொழிவால் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழுக் கொள்ளவான 119 அடியில் 117.45 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர், வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தென் பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் கொளமாஜனூர், திருவாதனூர், புதூர் செக்கடி, ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com