கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தென் பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நீர்பிடிப்புப் பகுதியில் பெரும் மழை பொழிவால் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழுக் கொள்ளவான 119 அடியில் 117.45 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர், வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ரஜினி பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
இதனால் தென் பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் கொளமாஜனூர், திருவாதனூர், புதூர் செக்கடி, ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெங்களூருக்கு மேக்கேதாட்டு தேவையே இல்லை! கர்நாடக அணையில் பயன்படுத்தாமல் கிடக்கும் தண்ணீர்!

கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா் நாளை மேட்டூா் அணையை வந்தடையும்!

கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் யானைக் கூட்டம்! மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை!

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து 1,488 கனஅடி
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



