கோப்புப்படம்
கோப்புப்படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளார்.
Published on

பெரம்பலூர்: தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும்.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com