கொரோனா குமார் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனம் இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்ததையடுத்து, சிம்பு செலுத்திய ரூ. 1 கோடியை, வட்டியுடன் அவருக்கு திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா குமார் படம் நடிப்பதற்கு நடிகர் சிம்பு அதற்குரிய சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, படப்பிடிப்புக்கு வரவில்லை என்றுக்கூறி, மற்ற படங்களில் சிம்பு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து, கொரோனா குமார் பட நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இவ்வழக்கு விசாரணையின்போது, ரூ. 1 கோடி உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என்று சிம்புவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர், சிம்பு மற்றும் கொரோனா குமார் பட நிறுவனத்திற்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வுகாண, ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக உயர் நீதிமன்றம் நியமித்தது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மத்தியஸ்தர் முன் உள்ள இவ்வழக்கை இருவரும் திரும்பப் பெற்றதால், சிம்பு செலுத்திய ரூ. 1 கோடியை, வட்டியுடன் ரூ. 1 கோடியே 98 ஆயிரத்து 917 ரூபாயாக சிம்புவுக்கு திரும்பக் கொடுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பில்லா மறுவெளியீட்டுத் தேதி!

ஜனநாயகக் கடமை! சென்னை திரும்பினார் அஜித் குமார்!
ஏகே - 64 இணை தயாரிப்பாளராக அஜித்?
மாம்பழம் சின்னம் விவகாரம்: ராமதாஸுக்கு தொடர் பின்னடைவு!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


