காஞ்சிபுரம்: கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதை அடுத்து உபநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். வியாழக்கிழமை (டிச.12) நீர் இருப்பு 21.90 அடியாகவும், கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் இருந்த நிலையில், தற்போது ஏரிக்கு நீர் வரத்து 6,500 கன அடியாகவும், நீர்மட்டம் 23.29 அடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க |பூண்டி ஏரியில் உபரிநீா் திறப்பு அதிகரிப்பு: வெள்ள எச்சரிக்கை
தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வரத்து காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை காலை (டிச.13) 8 மணியளவில் வினாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 1000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், சோழவரம் ஏரியில் 6.43 அடியும், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஏரியில் 31.03 அடியும் நீா் இருப்பு உள்ளது. இந்த ஏரிகளில் தற்போது 9,168 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது.
செல்வப் பெருந்தகை ஆய்வு
மேலும் நீர் இருப்பு நீர் வெளியேற்றும் பணிகளை ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை மற்றும் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
கரையோர மக்களுக்கு உரிய முறையில் நீர் வெளியேற்றம் குறித்த தகவல்களை தருமாறு கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னை குடிநீா் ஏரிகளில் நீா் இருப்பு 50%-க்கும் கீழ் குறைந்தது!

வீடுகளுக்குள் எதிர்பாராத வகையில் புகுந்த வெள்ள நீர்!

சென்னை குடிநீா் ஏரிகளில் 52 % நீா் இருப்பு
விடியோக்கள்

Ravindran duraisamy interview | ராமதாஸ் எடுத்த முடிவு சரியா? | Dr Ramadoss | PMK | Anbumani
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



