தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

பெற்றோர் பைக் வாங்கி தராததால் சாவிகளை விழுங்கிய மகன்!

ஆந்திராவில் பெற்றோர் பைக் வாங்கி தராததால் மகன் சாவிகளை விழுங்கியுள்ளார், இதுபற்றி...

News image

தேவரா பவானி பிரசாத்

Updated On :13 டிசம்பர் 2024, 5:36 pm IST

குண்டூர்: ஆந்திராவில் பெற்றோர் பைக் வாங்கித் தர மறுத்ததினால், மகன் கோபத்தில் நான்கு சாவிகளை விழுங்கியுள்ளார்.

பாலநாடு மாவட்டத்திலுள்ள நரசராப்பேட்டை எனும் ஊரைச் சேர்ந்த தேவரா பவானி பிரசாத் எனும் இளைஞர், நேற்று (டிச.12) காலை தனக்கு பைக் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் மறுப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த அவர் நான்கு இரும்புச் சாவிகளை விழுங்கியுள்ளார். அதன்பின்னர், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து அந்த இளைஞரின் பெற்றோர் அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், அங்கிருந்து அவர் குண்டூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் அங்குள்ள மருத்துவர்களால் அதிநவீன லேப்பரோஸ்கோப்பி சிகிச்சையின் மூலம் அறுவை சிகிச்சை எதுவுமின்றி அவரது வயிற்றிலிருந்து நான்கு சாவிகளையும் அகற்றப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.

இதுகுறித்து தலைமை மருத்துவர் கவிதா கூறுகையில், மருத்துவமனையில் அதிநவீன லேப்பரோஸ்கோப்பி தொழிநுட்ப வசதி இருந்ததினால், எந்தவொரு அறுவை சிகிச்சையுமின்றி இளைஞரது வயிற்றிலிருந்து நான்கு சாவிகளும் அகற்றப்பட்டதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.