புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தில்லி டிபிஎஸ் ஆர்கே புரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
இது தொடர்பாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சனிக்கிழமை காலை 6.09 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் அழைப்பு வந்தது.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீஸார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் பள்ளிக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் அந்தப் பள்ளியில் வெடிகுண்டு கண்டறியும் குழு மூலம் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
வெள்ளிக்கிழமை சுமார் 30 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க | ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை பின்னடைவு
இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீஸார் மற்றும் மோப்ப நாய் மூலமாக பள்ளிகளில் சோதனை நடைபெற்றது.
அதற்கு முன், கடந்த திங்கள்கிழமை (டிச.9) ஒரேநாளில் 44 பள்ளிகளுக்கு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்காததால் அந்த மிரட்டல்களை புரளி என போலீசார் அறிவித்தனர்.
ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுபோன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது யார் என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மகாராஷ்டிரம்- குஜராத் முதல்வா் அலுவலகங்கள், ஆா்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly




