மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல், இந்த வாரத்தில் மூன்றாவது சம்பவம்

தில்லி டிபிஎஸ் ஆர்கே புரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

News image
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.- கோப்புப்படம்
Updated On :14 டிசம்பர் 2024, 5:11 am

DIN

புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தில்லி டிபிஎஸ் ஆர்கே புரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.

இது தொடர்பாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சனிக்கிழமை காலை 6.09 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் அழைப்பு வந்தது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீஸார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் பள்ளிக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் அந்தப் பள்ளியில் வெடிகுண்டு கண்டறியும் குழு மூலம் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

வெள்ளிக்கிழமை சுமார் 30 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீஸார் மற்றும் மோப்ப நாய் மூலமாக பள்ளிகளில் சோதனை நடைபெற்றது.

அதற்கு முன், கடந்த திங்கள்கிழமை (டிச.9) ஒரேநாளில் 44 பள்ளிகளுக்கு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்காததால் அந்த மிரட்டல்களை புரளி என போலீசார் அறிவித்தனர்.

ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது யார் என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.