ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் மாநிலக் காவல்துறையோடு இணைந்து இந்திய ராணுவம் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், அதன் தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய ராணுவம் சார்பில் அமைக்கப்பட்ட சினார் படையினர் மற்றும் அம்மாநில காவல்துறையினர் இணைந்து நேற்று (டிச.17) குப்வாரா மாவட்டத்திலுள்ள தங்கதார் கிராமத்தின் அம்ரோஹி பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அந்த சோதனையில், 4 கைத்துப்பாக்கிகள் அதற்கான தோட்டாக்கள் மற்றும் 4 கிலோ அளவிலான போதைப் பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக, கடந்த டிச.11 அன்று அம்மாவட்டத்தின் பரமுல்லா-ஹண்த்வாரா சாலையில் ஐ.இ.டி எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று, சினார் படையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு - காஷ்மீா்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழப்பு
ரூ. 20 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்: நைஜீரிய நாட்டுப் பெண்கள் இருவா் கைது

ஜம்மு - காஷ்மீர் முதல்வரின் திருமணத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!

ஜம்மு-காஷ்மீரில் பதுங்கு குழிகள் அழிப்பு: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



