ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் மாநிலக் காவல்துறையோடு இணைந்து இந்திய ராணுவம் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், அதன் தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய ராணுவம் சார்பில் அமைக்கப்பட்ட சினார் படையினர் மற்றும் அம்மாநில காவல்துறையினர் இணைந்து நேற்று (டிச.17) குப்வாரா மாவட்டத்திலுள்ள தங்கதார் கிராமத்தின் அம்ரோஹி பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அந்த சோதனையில், 4 கைத்துப்பாக்கிகள் அதற்கான தோட்டாக்கள் மற்றும் 4 கிலோ அளவிலான போதைப் பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக, கடந்த டிச.11 அன்று அம்மாவட்டத்தின் பரமுல்லா-ஹண்த்வாரா சாலையில் ஐ.இ.டி எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று, சினார் படையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அழகான (அமைதியான) காஷ்மீர்!
திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்
தருமபுரியில் 645 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
80 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



