லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாலத்திலிருந்து 3.6 கிலோ வெடி பொருள் கைப்பற்றல்!

மணிப்பூரில் பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடி பொருளை பாதுகாப்புத் துறை கைப்பற்றியதைப் பற்றி...

News image
மணிப்பூரில் 3.6 கிலோ வெடி பொருள் கைப்பற்றல்.
Updated On :25 டிசம்பர் 2024, 6:41 am

DIN

மணிப்பூர் மாநிலம் சூராசந்திரப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடி பொருளும் ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

சூராசந்திரப்பூர் மாவட்டம் லெய்சாங் கிராமத்தில் இந்தியப் பாதுகாப்புப் படைகளான அசாம் ரைஃபில்ஸ் மற்றும் மணிப்பூர் மாநில காவல்துறை இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இம்பால்-சூராசந்திரப்பூர் வழியிலுள்ள ஒரு பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடிபொருளும், அதனை வெடிக்க செய்யக்கூடிய டெடோனேட்டர்களும் மற்றும் சில சாதனங்களும் மீட்கப்பட்டன.

இதுகுறித்து இன்று (டிச.25) ஸ்பியர் கார்ப்ஸ், தங்களது எக்ஸ் தளப்பதிவில் கூறியதாவது, தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் லெய்சாங் கிராமத்தில் சோதனை மேற்கொண்டதாகவும், அதில் கைப்பற்றப்பட்ட 3.6 கிலோ அளவிலான வெடிபொருளை செயல் இழக்கச் செய்ய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மணிப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (டிச.24) சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் மோல்ஜோல் கிராமத்தில் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட சோதனையில் M16 ரக துப்பாக்கி ஒன்றும், 4 நாட்டுத் துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.