27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நெதர்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிவப்பு பாண்டாக்கள்!

டார்ஜிலிங் உயிரியல் பூங்காவிற்கு நெதர்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிவப்பு பாண்டாக்களைப் பற்றி..

News image

சிவப்பு பாண்டா - Dinamani

Updated On :26 டிசம்பர் 2024, 2:48 pm IST

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து 2 சிவப்பு பாண்டாக்கள் வரவழைக்கபட்டன.

கிழக்கு இமயமலைப் பகுதிகளிலும் தென்மேற்கு சீனாவையும் பூர்வீகமாகக் கொண்டவை சிவப்பு பாண்டாக்கள். இது அழிந்து வரும் உயிரினங்களின் ஒன்று என்பதினால் அதனைப் பாதுகாக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கிலுள்ள பத்மஜா நாயுடு ஹிமாலயன் உயிரியல் பூங்காவிற்கு நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ராட்டர்டேமிலிருந்து இரண்டரை வயதுடைய 2 சிவப்பு பாண்டாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 27 மணிநேர விமானப் பயணத்தைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களின் சோதனைக்கு பின்னர் நேற்று (டிச.25) காலை கல்கத்தா விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து அதற்காகவே உருவாக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய வாகனத்தில் அவை டார்ஜிலிங் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து அந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், இரண்டு சிவப்பு பாண்டாக்களும் மருத்துவக் காரணங்களுக்காக சுமார் ஒரு மாதக் காலம் தனிமைப் படுத்தப்பட்டு, பின்னர் ஏற்கனவே அங்கிருக்கும் சிகப்பு நிற பாண்டாக்களுடன் இணைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்து மாநில மற்றும் மத்திய அரசுகளின் அனுமதிப்பெற்று தற்போது அவை அங்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 சிவப்பு பாண்டாக்களுக்கு விஷால் மற்றும் கோஷி என உயிரியல் பூங்கா அதிகாரிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

ஏற்கனவே, அந்த உயிரியல் பூங்காவில் 7 ஆண், 12 பெண் என மொத்தம் 19 சிவப்பு பாண்டாக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.