மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து 2 சிவப்பு பாண்டாக்கள் வரவழைக்கபட்டன.
கிழக்கு இமயமலைப் பகுதிகளிலும் தென்மேற்கு சீனாவையும் பூர்வீகமாகக் கொண்டவை சிவப்பு பாண்டாக்கள். இது அழிந்து வரும் உயிரினங்களின் ஒன்று என்பதினால் அதனைப் பாதுகாக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கிலுள்ள பத்மஜா நாயுடு ஹிமாலயன் உயிரியல் பூங்காவிற்கு நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ராட்டர்டேமிலிருந்து இரண்டரை வயதுடைய 2 சிவப்பு பாண்டாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 27 மணிநேர விமானப் பயணத்தைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களின் சோதனைக்கு பின்னர் நேற்று (டிச.25) காலை கல்கத்தா விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து அதற்காகவே உருவாக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய வாகனத்தில் அவை டார்ஜிலிங் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிக்க: 4 நாள்களாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தை!
இதுகுறித்து அந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், இரண்டு சிவப்பு பாண்டாக்களும் மருத்துவக் காரணங்களுக்காக சுமார் ஒரு மாதக் காலம் தனிமைப் படுத்தப்பட்டு, பின்னர் ஏற்கனவே அங்கிருக்கும் சிகப்பு நிற பாண்டாக்களுடன் இணைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்து மாநில மற்றும் மத்திய அரசுகளின் அனுமதிப்பெற்று தற்போது அவை அங்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 சிவப்பு பாண்டாக்களுக்கு விஷால் மற்றும் கோஷி என உயிரியல் பூங்கா அதிகாரிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
ஏற்கனவே, அந்த உயிரியல் பூங்காவில் 7 ஆண், 12 பெண் என மொத்தம் 19 சிவப்பு பாண்டாக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல்லில் அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா அமைக்க நடவடிக்கை: சுற்றுலா, தொழில் வளா்ச்சியை மேம்படுத்தவும் ஆலோசனை

காண்டாமிருக பாதுகாப்புக்கு சிறப்புத் திட்டம்: அமைச்சா் பூபேந்தா் யாதவ் தகவல்

காரியல் முதலை இனத்தைக் காப்பாற்ற தில்லி உயிரியல் பூங்காவில் புதிய முயற்சி

தில்லி உயிரியல் பூங்காவில் மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


