
அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ. 6 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல்!
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் இரு வேறு நடவடிக்கைகளில் ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநில பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளை பற்றி அம்மாநில முதல்வர் தனது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் நடவடிக்கையாக குவாஹட்டி மாவட்டத்தின் பல்டான் ப்ஜார் பகுதியிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சிறப்பு அதிரடி படையினர் நேற்று இரவு மேற்கொண்ட சோதனையின் போது 416 கிராம் அளவிலான ஹெராயின் கைப்பற்றப்பட்டதாகவும் அதன் மதிப்பு சுமார் 2.75 கோடி எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் படுகாயம்!
இந்நிலையில், அந்த போதைப் பொருளுடன் தொடர்புடைய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு நகோன் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது ரூ.3.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதனை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், அஸ்ஸாம் முதல்வரின் எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்த அம்மாநில காவல்துறையினருக்கு அவர் தனது பாரட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.