வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

போலி ஆவணங்கள் மூலம் குடியேறிய வங்கதேசத்து நபர் கைது!

மேற்கு வங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் குடியேறிய வங்கதேசத்து நபர் கைது செய்யப்பட்டதைப் பற்றி..

News image

கோப்புப் படம்

Updated On :28 டிசம்பர் 2024, 5:47 am

DIN

கொல்கத்தாவில் போலி ஆவணங்களின் மூலம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்து நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தின் நராய்ல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் போலியாகத் தயாரிக்கப்பட்ட இந்திய ஆவணங்களைக் கொண்டு சட்டவிரோதாமக கிடர்பூர் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து குடியேறியுள்ளார்.

மேலும், அவரிடம் இருந்து போலியாக இந்திய முகவரியில் உருவாக்கப்பட்ட ஆதார் அட்டையும், பான் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக போலி ஆவணங்களின் மூலம் இந்தியாவிற்குள் குடியேறிய மற்றொரு வங்கதேசத்து நபரும் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அம்மாநில காவல்துறையினர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறும் வங்கதேசத்தினருக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து தரும் கூட்டமைப்பை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.