ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பிரபல சுற்றுலா விடுதியில் தீ! 3 வெளிநாட்டினர் பலி!

தாய்லாந்து நாட்டில் பிரபல சுற்றுலா விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியானதைப் பற்றி...

News image

தீ விபத்து நிகழ்ந்த சுற்றுலா விடுதி

Updated On :30 டிசம்பர் 2024, 7:47 am

DIN

பாங்காக் நகரத்தில் பிரபல சுற்றுலா விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வெளிநாட்டினர் பலியாகினர்.

சுற்றுலா நகரமான பங்காக்கின் கான்சாவோ சாலையில் 6 அடுக்குமாடிகளைக் கொண்ட எம்பர் எனும் பிரபல சுற்றுலா விடுதி ஒன்று உள்ளது.

நேற்று (டிச.29) இரவு அந்த விடுதியின் 5 வது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு தங்கியிருந்த 3 வெளிநாட்டினர் பலியாகியுள்ளனர்.

தகவலறிந்து உடனடியாக அங்கு விரைந்த தாய்லாந்தின் தீயணைப்பு படையினர் தீயை அணைத்து, அந்த விடுதியில் தங்கியிருந்த 75 பேரை பத்திரமாக மீட்டனர்.

மேலும், இந்த விபத்தில் 5 வெளிநாட்டவர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பலியான 3 பேரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாங்காக் நகர ஆளுநர் சத்சார்ட் சிட்டிபுண்ட், புத்தாண்டு நாளன்று அங்க நடவிருக்கும் கொண்டாட்டங்களின் போது வெடிக்கப்படும் பட்டசுக்களை மிகுந்த கவனத்தோடு வெடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.