சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

செரிமானத்தை சிறப்பாக்கும் சில பானங்கள்

செரிமானத்தை சிறப்பாக்கும் சில பானங்கள் உள்ளன.

News image
Updated On :21 பிப்ரவரி 2024, 6:32 pm IST

இந்த வேகமாக உலகில், நமக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் தவிக்கும் நமது உடலுறுப்புகளில் முதன்மையானது செரிமான மண்டலம்தான்.

விதவிதமாகக் கிடைக்கிறது, தாய்லாந்து உணவு, கொரிய சாப்பாடு என எது கண்ணில் பட்டாலும் அதனை நேராக கபளீகரம் செய்து விடுகிறோம்.

இதன் பயனாக நமக்கு மனத்திருப்தி கிடைக்கிறது. ஆனால், நம் வயிறோ, எதைப் போட்டிருக்கிறான் என்று தெரியாமல், அதனை எப்படி செரித்துமுடிப்பது என்று தெரியாமல் சில வேளைகளில் குழப்பத்தில் அந்தப் பணியை அப்படியே விட்டுவிடுகிறது.

அதனால் ஏற்படுவதுதான் செரிமானக் கோளாறுகள். நமது ஊரில் விளையும் நமது தட்பவெப்பத்துக்கு ஏற்ற உணவுகளை நாம் உண்பதுதான் நமக்கும் நம் வயிற்றுக்கும் செய்யும் நல்லது. அதை விடுத்து அடிக்கடி வெளிநாட்டின் பாரம்பரியத்தைக் கொண்ட உணவுகளை சாப்பிட்டால், அது நமது செரிமானத்தை முற்றிலும் முடக்கிவிடக் கூடும்.

சில பானங்கள் செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு சில மணி நேரத்தில் அல்லது ஒரு மணி நேரத்துக்குள் சில பானங்களை குடிப்பதால் செரிமானம் நன்றாக நடைபெறும் என்கிறார்கள்.

காய்கறி சூப்

சூப் என்பது பொதுவாகவே நன்கு பசியைத் தூண்டி செரிமானத்தை அதிகரிக்கும். அதில் போடப்படும் மிளகுக்கு அந்த வேலையை நன்றாகவே செய்யத் தெரியும்.

இஞ்சி டீ

இஞ்சி சேர்த்து போடப்படும் டீ அல்லது பிளாக் டீயை குடிப்பதால், சாப்பிட்ட உணவு நன்கு செரிமானம் அடையும்.

ரசம்

சாப்பிட்டதும், சூடாக வைத்த ரசத்தை ஒரு டம்ளரில் ஊற்றி குடித்துப் பாருங்கள். எந்த செரிமானப் பிரச்னை இருந்தாலும் சரியாகிவிடும்.

எதுவும் இல்லையா. அதிக எண்ணெய் கொண்ட உணவுப் பொருளை சாப்பிட்டதும் சூடாக தண்ணீர் குடித்தாலோ ஜீரணப் பிரச்னைகள் சரியாகிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.