ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்த ரூ.5 கோடி!

சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்துவதற்காக ரூ.5 கோடி நிதி வனத்துறைக்கு வழங்கப்பட்டது.

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 4:51 pm IST

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு மற்றும் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்துவதற்காக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.5 கோடி நிதியை வனத்துறைக்கு வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் இன்று (23.02.2024) சென்னை, தலைமைச் செயலகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு பசுமை கால நிலை நிறுவனத்துடன் (TNGCC) இணைந்து, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.5 கோடி நிதியை வனத்துறைக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, இ.ஆ.ப., வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர்/வனத்துறை தலைவர் சுப்ரத் முகபத்ரா, இ.வ.ப., முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் (பசுமை தமிழ்நாடு இயக்கம்) தீபக் ஸ்ரீவத்சவா, இ.வ.ப., தலைமை வனப் பாதுகாவலர் (சென்னை மண்டலம்) கௌ.கீதாஞ்சலி, இ.வ.ப., செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, இ.வ.ப., தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.