சென்னை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கப்பை கிராமத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 2 சிறுவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக முதல்வா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கப்பை கிராமத்தில் சனிக்கிழமை(பிப்.24) அதிகாலை யுவராஜ் என்பவர் தன் குடும்பத்தாருடன் தனது சொந்த ஆட்டோவில் சென்னையிலிருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவற்றில் மோதி அருகிலிருந்த தரைக் கிணற்றில் விழுந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த யுவராஜ் இரு மகன்கள் பிரதீஷ் (9) மற்றும் ஹரிபிரசாத் (8) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.