தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

நான்கு நாள்களுக்கு மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்களின் கோரிக்கை

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 12:31 pm

DIN

சென்னை: நான்கு நாள்களுக்கு மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமவேலை சம ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் 4 நாள்களுக்கு மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஊதிய முரண்பாட்டை களைய எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்தப் போராட்டத்தில் அவா்கள் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நிதிநிலை சீராகும்போது, கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு கூறுவது ஏற்புடையது அல்ல. அவா்களின் நியாயமான கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு முன் வர வேண்டும் என்று வாசன் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.