
விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10, 13 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 276 வாக்குச்சாவடி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்பட்டு, 29 போ் களத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.