மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இந்திய மகளிர் அணிக்கு 190 ரன்கள் இலக்கு

சென்னையில் தொடங்கிய டி20 தொடர்: இந்திய மகளிர் அணிக்கு 190 ரன்கள் இலக்கு

News image

டி20 முதல் ஆட்டம்.

Updated On :5 ஜூலை 2024, 9:07 pm IST

இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிக்க மகளிர் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டியை இந்திய மகளிர் அணி முழுமையாக வென்றனது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் மரிஸான் கேப் அரைசதம் கடந்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்களைக் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ், பூஜா வஸ்திரேகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணி 190 எடுத்தால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.