இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிக்க மகளிர் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டியை இந்திய மகளிர் அணி முழுமையாக வென்றனது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் மரிஸான் கேப் அரைசதம் கடந்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்களைக் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ், பூஜா வஸ்திரேகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணி 190 எடுத்தால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஏ’ அணிகள் இடையேயான டெஸ்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி

இந்தியாவுடனான கடைசி டி20: தென்னாப்பிரிக்க மகளிர் வெற்றி

இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனாகும் ஸ்ரேயாஷ் ஐயர்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

