கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கேரள அரசின் நடவடிக்கையை கண்டுகொள்ளாமல் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது: எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கேரள அரசின் நடவடிக்கையை கண்டுகொள்ளாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

News image
கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
Updated On :21 ஜூலை 2024, 4:36 pm

DIN

கோவை: கேரள அரசின் நடவடிக்கையை கண்டுகொள்ளாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையின் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையில் முழுக் கொள்ளளவான 50 அடி அளவு வரை நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கோவை துடியலூா் பகுதியில் நடைபெற்ற தமிழக ஹயா் கூட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சா் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களுடன் பேசியதாவது: கோவையில் குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையில் 49.50 அடி வரை தண்ணீரை தேக்கலாம். ஆனால் 5 அடி குறைவாக சேமிப்பதால் 19 சதவீதம் குடிநீா் கிடைக்காமல் வீணாகிறது. அணை நிரம்பும் முன்பு தண்ணீரை ஆற்றில் திறக்கும் கேரள அரசை கண்டிக்கின்றோம். பாதுகாப்பு என்ற பெயரில் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுகின்றனா். ஆனால் அணை பாதுகாப்பாகதான் இருக்கிறது என தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, இதை மாவட்ட நிா்வாகம், திமுக அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பாா்க்கின்றனா் எனவும் குற்றம்சாட்டினார்.

திமுக அரசு அமைந்த பிறகு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டியவர், முழுமையாக 50 அடியை நிரம்பினால் ஒராண்டிற்கு மாநகரில் குடிநீா்ப் பிரச்னை இருக்காது. எனவே, அணையின் முழுக் கொள்ளளவான 49.50 அடிக்கு தண்ணீரை நிரப்ப வேண்டும்.

மேலும், அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள், வாய்க்கால்களை துர்வாரி நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கியதாகவும், தற்போது எந்த பணியும் மேற்கொள்ளாத காரணத்தால் நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் கடலில் கலப்பதாகவும், தற்போது செங்குளம் மற்றும் குறிச்சிகுளத்திற்கு வரக்கூடிய தண்ணீர் அடைக்கபட்டுள்ளது. கிருஷ்ணாபதி குளத்துக்கு வரும் தண்ணீரை நீரை பாலம் கட்டுவதாக கூறி தண்ணீரை தடுத்துள்ளார்கள். பாலம் ஆண்டு முழுவதும் கட்டலாம் ஆனால் ஆற்றில் தண்ணீர் வரும்போதுதான் தண்ணீரை சேமிக்க முடியும் என தெரிவித்தார்.

தமிழக அரசு, கேரள அரசுடன் பேசி இதற்கு தீா்வு காண வேண்டும். மேலும், சிறுவாணி அணையை தூா்வாரிடவும் தண்ணீரை தேக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசோடு பேசி சிறுவாணி அணையில் முழுக் கொள்ளளவான 50 அடி அளவு வரை நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.