மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மின்சார ரயில் சேவையில் மாற்றம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் சனிக்கிழமை(ஜூலை 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) காலை 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை செல்லும் ரயிலும் ரத்து

News image

கோப்புப்படம்.

Updated On :27 ஜூலை 2024, 5:01 am

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரண்டு நாள்களுக்கு பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் சனிக்கிழமை(ஜூலை 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) காலை 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 9.40 முதல் இரவு 11.59 மணி வரை செல்லும் ரயிலும், சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் இரவு 7.19, 8.15, 8.45, 8.55 மற்றும் 9.40 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

இதுபோல், தாம்பரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 10.30 மணி முதல் இரவு 11.40 மணி வரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.