ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 405 நாள்களுக்குப் பிறகு 71-ஆவது முறையாக 100 அடியாக உயர்ந்தது.

News image

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 405 நாள்களுக்குப் பிறகு 71-ஆவது முறையாக 100 அடியாக உயர்ந்தது.

Updated On :27 ஜூலை 2024, 4:38 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 93,828 கன அடியாக அதிகரித்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் 405 நாள்களுக்குப் பிறகு 71-ஆவது முறையாக 100 அடியாக உயர்ந்தது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் அணைகளுக்கு வரும் நீர் முழுமையாக காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 93,828 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து சனிக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 71-ஆவது முறையாக 100 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.5 டிஎம்சியாக உள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ள்கிழமை காலை 92.62 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 100 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.