அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆட்சி யாருக்கு? தாறுமாறான வேகத்தில் பங்குச்சந்தை!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் புதிய உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

News image
Updated On :3 ஜூன் 2024, 7:02 am

DIN

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன்.4) வெளியாகவுள்ள நிலையில், பங்குச்சந்தை வர்த்தகம் புதிய உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தின் முதல்நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் மதிப்புகள் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன.

தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ளதால், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் பங்குசந்தை நிறுவனங்களின் பங்கு விலைகள் குறையும் என பலரும் பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்யக் காத்திருக்கின்றனர்.

ஆனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியானதால் இப்போதே பலரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும், வாங்கிய பங்குகளை விற்க முடியாத அளவுக்கு திணறியும் வருகின்றனர்.

இன்று காலை துவங்கிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் 12.25 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 2355 புள்ளிகள் அதிகரித்து 76243.03-ல் ஏற்றத்தைக் கண்டு வருகிறது. நிஃப்டி 765 புள்ளிகள் அதிகரித்து 23233.04-ல் உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

ஐடி நிறுவனங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் என பல நிறுவனப் பங்குகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.