மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொலையாளிக்கு பொதுமன்னிப்பு: இலங்கை நீதிமன்றம் ரத்து

முன்னாள் அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேனா வழங்கிய பொதுமன்னிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

News image
முன்னாள் அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேன
Updated On :7 ஜூன் 2024, 4:27 am

DIN

கொழும்பு: இலங்கையில் கொலைக்குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்ரமந்த ஜெயமஹா என்பவருக்கு முன்னாள் அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேன வழங்கிய பொதுமன்னிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அந்த நாட்டுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு சுற்றுலா வந்திருந்த 19 வயது ஸ்வீடன் பெண்ணை ஜெயமஹா அடித்துக் கொலை செய்தாா். கொல்லப்பட்ட பெண்ணின் மண்டையொடு 64 இடங்களில் உடைந்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக நடைபெற்ற வழக்கில் ஜெயமஹா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவருக்கு முதலில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மேல்முறையீட்டில் மரம தண்டைனையும் விதிக்கப்பட்டது.எனினும், ஜெயமஹாவுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேன பொதுமன்னிப்பு வழங்கினாா்.

அதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்தது.

மேலும், மனுதாரருக்கு ரூ.10 லட்சம் (இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் ஸ்ரீசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.ஏற்கெனவே, கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றத்துக்காக ஸ்ரீசேனாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையிலேயே அவா் இதுவரை பாதியைத்தான் செலுத்தியுள்ளாா் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.