யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கள்ளச்சாராய மரணம்: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அதிமுக கடிதம்

கள்ளச்சாராயம் அருந்திவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி அதிமுக கடிதம் கொடுத்துள்ளது.

News image
Updated On :20 ஜூன் 2024, 5:39 am

DIN

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி அதிமுக கடிதம் கொடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் பகுதி மற்றும் கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் 109 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் 35 பேர் உயிரிழ்ந்துள்ளனர். இதில் 5 பேர் பெண்கள். இறந்தவர்களில் உடல்கூராய்வு முடிந்த 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி அதிமுக கடிதம் கொடுத்துள்ளது.

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை(ஜூன் 21) விவாதிக்க அதிமுகவினர் நேரம் கேட்டு பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் அதிமுக பேரவை உறுப்பினர்கள் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமை பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.