ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

டிரெய்னி மற்றும் ப்ராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
Published on
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி மற்றும் ப்ராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியாளர் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.383/hr/ns(s&cs)

பணி: Trainee Engineer-I

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 40,000

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணி அறிவியல் போன்ற பிரிவுகள் ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Engineer-I

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 55,000

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணி அறிவியல் போன்ற பிரிவுகள் ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 23.3.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com