பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

மீண்டும் சீரியல் பயணத்தை தொடங்கினார் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.

News image
Updated On :19 மார்ச் 2024, 4:30 pm IST

சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. நாதஸ்வரம் தொடரில் கோபி கதாபாத்திரத்தின் நான்கு தங்கைகளில் ஒருவராக இவர் நடித்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் உள்ளிட்ட தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் ஸ்ருதி நடித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை ஸ்ருதி திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடைபெற்று ஓராண்டே ஆன நிலையில், அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக காலமானர்.

Story image

கணவர் இழப்பிற்குப் பிறகு எந்த தொடரிலும் நடிக்காமல் ஸ்ருதி, தற்போது புதிய தொடரொன்றில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ருதி சண்முகப்பிரியா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடரான லட்சுமி தொடரில் இணைந்துள்ளார். இத்தொடரில் விஜி பாத்திரத்திரல் நடிக்கிறார்.

Story image

இது குறித்த புகைப்படங்களை ஸ்ருதி சண்முகப்பிரியா இன்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.