புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்
Published on
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை(மார்ச் 22) மாலை பதவியேற்கிறார்.

புதுவை துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக் கொண்டாா்.

சி.பி.ராதாகிருஷ்ணன்
சமூக வலைதள தகவல்களில் உண்மை கண்டறிய தனிப் பிரிவு: மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை

இதையடுத்து ஜார்க்கண்டர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை(மார்ச் 22) மாலை பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com