வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி?

ஈரோடு மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி அவரது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2024, 9:51 am

DIN

ஈரோடு மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி அவரது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி 2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் ஈரோடு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கட்சியின் தார்மீக அடிப்படையில் தேர்தல் பணிகளில் கணேசமூர்த்தி ஈடுபட்டு வந்தார்.

இந்த சூழ்நிலையில், கணேசமூர்த்தி கடந்த ஒருவாரமாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கணேசமூர்த்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.