அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் 5 பேர் போட்டி!

ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மேலும் நான்கு பேர் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவதால், ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் வாக்குகள் சிதறும்.

News image
ஓ.பன்னீர்செல்வம்
Updated On :26 மார்ச் 2024, 10:01 am

DIN

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் நிலையில், மேலும் நான்கு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் சின்னம், கொடி உள்ளிட்டவை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

தனது ஆதரவாளர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரை திங்கள்கிழமை சந்தித்து போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் மேக்கிழார்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவரும் நேற்று சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தெற்குகாட்டூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மற்றொருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் தந்தையின் பெயர் ஒய்யாரம்.

மேலும், இரண்டு ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு செய்துள்ளனர். இதுவரை 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரத்தில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் சுயேச்சையாக களம் காண்பதால், ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.