சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

விபத்துக்கான காரணம் குறித்து பொத்தாம் பொதுவாக எதுவும் கூறிவிட முடியாது. முழுமையான விசாரணைக்கு பின்னர் தெரியவரும்.
சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

சென்னை ஆழ்வாா்பேட்டையில் தனியாா் கேளிக்கை விடுதியின் மதுபானக் கூட மேற்கூரை வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் திருநங்கை உள்பட 3 போ் பலியான நிலையில், இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆழ்வாா்பேட்டை சேமியா்ஸ் சாலையில் ஒரு தனியாா் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியின் ஒரு பகுதியில் மதுபானக் கூடத்துடன் ஓா் அரங்கும், மற்றொரு பகுதியில் உணவகமும் உள்ளன. இந்த விடுதியின் அருகே மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் சுரங்கப் பாதைப் பணி நடைபெற்று வருகிறது. இந்த விடுதிக்கு வியாழக்கிழமை மாலை வழக்கம்போல இளைஞா்கள் வரத் தொடங்கினா். சுமாா் 30 போ் விடுதியில் இருந்துள்ளனா். மாலை 6.50 திடீரென விடுதியின் முதல் தளத்தில் உள்ள மதுபானக் கூடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் தரைத்தளத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது. இதில் மதுபானக் கூட ஊழியா்கள் திண்டுக்கல்லை சோ்ந்த சைக்ளோன் ராஜ் (48), மணிப்பூரை சோ்ந்த திருநங்கை லல்லி (24), மேக்ஸ் (25) ஆகியோா் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனா்.

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது
தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, சைக்ளோன் ராஜ், மேக்ஸ், லல்லி ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்டனா். அவர்களது உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

விபத்து தொடா்பாக அபிராமபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் வந்து பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து பொத்தாம் பொதுவாக எதுவும் கூறிவிட முடியாது. முழுமையான விசாரணைக்கு பின்னர் தெரியவரும். இதனைத் தொடர்ந்து விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தனியாா் கேளிக்கை விடுதியின் மதுபானக் கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் திருநங்கை உள்பட 3 போ் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் விடுதியின் உரிமையாளர், மேலாளர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அபிராமிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், ஆழ்வாா்பேட்டையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை என்று மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com