ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பத்மஸ்ரீ விருது வென்றவரின் காலில் விழுந்து வணங்கிய மோடி!

பிரதமர் மோடி ஒடிசாவில் பத்மஸ்ரீ விருது வென்றவரின் காலில் விழுந்து வணங்கினார்.

News image
கவிஞர் பூர்ணமாசி ஜானியிடம் ஆசி பெற்ற பிரதமர்- ஏஎன்ஐ
Updated On :11 மே 2024, 11:09 am

DIN

ஒடிசாவின் கந்தமாலில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார். பிரசார மேடையேறிய பிரதமர் மோடி, அங்கே அமர்ந்திருந்த 'பத்மஸ்ரீ விருது’ பெற்ற பழங்குடியின கவிஞர் பூர்ணமாசி ஜானியின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இந்நிகழ்வு காண்போரை நெகிழச் செய்தது.

80 வயதான கவிஞரும்,சமூக ஆர்வலருமான பூர்ணமாசி ஜானி குய், ஒடியா மற்றும் சமஸ்கிருத மொழிகளில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை இயற்றியுள்ளார்.அவருக்கு 2021 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தடிசரு பாய் என்று அழைக்கப்படும் பூர்ணமாசியின் பாதங்களை பிரதமர் மோடி தொட்டு வணங்கியது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.