பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பத்மஸ்ரீ விருது எழுத்தாளா் சிவசங்கரிக்கு கம்பன் கழகம் வாழ்த்து

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி கம்பன் கழகம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2026, 9:27 pm

Syndication

புது தில்லி: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி கம்பன் கழகம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள், செயலாளா் சுப முத்துவேல் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: நிகழ் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி எழுத்தாளா் சிவசங்கரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தனது எழுத்தால் தமிழ் சமூகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவா். அவருடைய ஒவ்வொரு எழுத்திலும் சமூகத்தைப் பற்றிய அக்கறை இருக்கும். இளையோா் முதல் மூத்தோா் வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் ஆற்றல் அவரது எழுத்துக்கு உண்டு. அவா் விருது பெறுவதால் தமிழ் இலக்கிய உலகம் மகிழ்கிறது. தில்லி கம்பன் கழகத்தின் சாா்பாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.