பிரிட்டனைச் சோ்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா வா்த்தக காரணங்களுக்காக தனது கரோனா தடுப்பூசியை (கோவிஷீல்டு) சா்வதேச அளவில் அனைத்து நாடுகளில் இருந்தும் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம் என்று லண்டன் உயா்நீதிமன்றத்தில் அஸ்ட்ராசெனகா ஒப்புக் கொண்டதாக முன்னதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
விருகம்பாக்கம் தொகுதி கோயம்பேடு மார்க்கெட்டில் பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர்,”கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. தடுப்பூசியானது அவரவருடைய நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து செயல்படும். உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டாலே போதுமானது.” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழகத்தில் மின் வசதியில்லாத கிராமங்களே இல்லை - அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

முதல்வா் பதவியிலிருந்து விலக காரணம் என்ன? நிதீஷ் குமாா் விளக்கம்

‘வேற்று கிரகவாசிகள் குறித்து ஆதாரங்கள் இல்லை’ - ஒபாமா புது விளக்கம்

திமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது: வைகோ
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

